திமுக- முஸ்லீம் லீக் உறவும், தங்கத் தாம்பாளமும்!
சென்னை:
நதிமுகவுக்கும், முஸ்லீம் லீக் கட்சிக்கும் சிறிது காலமாக நிலவி வந்த உறவுப் பிரிவு, தங்கத் தாம்பாளத்தில் ஏற்பட்டகீறல் போன்றது. கீறல் ஏற்பட்ட தங்கத் தாம்பாளத்தை உருக்கி, சரி செய்து புதிய தாம்பாளம் செய்தாகி விட்டதுஎன்று திமுக தலைவர் கருணாநிதி வர்ணித்துள்ளார்.
சென்னையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் கருணாநிதி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அண்ணா, காயிதே மில்லத் காலத்திலிருந்தேதிமுகவுக்கும், உங்களுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. நாம் இருவரும் நெருங்கிய உறவினர்கள்போல.
இடையில் சில காலம் உறவு இல்லை.அதற்காக நாம் இருவருக்கும் பகை என்று கூற முடியாது. மண்பானைஉடைந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் தங்கத் தாம்பாளத்தில் கீறல் விழுந்தால், தாம்பாளத்தைநொறுக்கி, உருக்கி புதிய தாம்பாளம் செய்து விடலாம். அதுபோலத்தான் திமுகவுக்கும், உங்களுக்கும் இடையேஉள்ள உறவு.
கீறல் அகற்றப்பட்ட, புத்தம் புது தங்கத் தாம்பாளம் போல, நாம் காட்சி அளிக்கிறோம். நம்மிடையேஏற்பட்டிருப்பது புதிய உறவு அல்ல, மாறாக மறுமலர்ச்சி. இது தொடர்ந்து நறுமணம் வீசிக் கொண்டிருக்கும்என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.