For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்குகள்: ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க எதிர்ப்புத் தெரிவித்தமுதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வருமானத்தை மீறி சொத்து குவித்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் மீது தமிழகத்தில் விசாரணை நியாயமாகநடத்தப்படாததால் அதை பெங்களூருக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்.

வீரப்பன், காவிரி பிரச்சனையால் கர்நாடகம்- தமிழகம் இடையே மோதல் இருந்து வரும் நிலையில் பெங்களூரில் விசாரணைநடத்தினால் நேர்மையான முறையில் வழக்கு நடத்தப்படாது என்றும், பெங்களூரில் தனக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் கூறிவழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு சமீபத்தில் கர்நாடகம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு ஜெயலலிதா வந்துசென்றபோது உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டிய கர்நாடக அரசு, அது போலவே பெங்களூருக்கு வழக்குவிசாரணைக்காக வந்தாலும் பாதுகாப்பு தருவோம் என்று கூறியது.

மேலும் நேர்மையாக, நியாயமாக வழக்கை விசாரிப்போம் எனவும், நீதிமன்றத்தையும் அமைத்தாகிவிட்டதாகவும் தனது பதில்மனுவில் கூறியிருந்தது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. கர்நாடகம்அளித்துள்ள பதிலுக்கு 2 வார காலத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அந்த நோட்டீசில் ஜெயலலிதாவுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X