விவசாயி தற்கொலைக்கு காரணம் வறட்சி அல்ல.. கள்ளக் காதல் தான்- சொல்கிறார் பொன்னையன்
சென்னை:
தஞ்சையில் விவசாயி வறட்சியால் தற்கொலை செய்து கொண்டதாக திமுக கூறிய குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்பொன்னையன், அவர் கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக புதுத் தகவலைத்தெரிவித்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி பேசுகையில்,தொடர்ந்து 2வது ஆண்டாக ஆளுநர் உரையின் தமிழாக்கம் படிக்கப்படவில்லை. தமிழ் தொடர்ந்துபுறக்கணிக்கப்படுகிறது.
அதேபோல காவிரிப் பிரச்சினையிலும் இந்த அரசு தொடர்ந்து தவறு செய்து வருகிறது. திமுக ஆட்சிக் காலத்தில்ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதிக்குள் காவிரிப் பாசனப்பகுதி விவசாயத்திற்காக மேட்டூர் அணை திறந்துவிடப்படும். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இது நடக்கவே இல்லை.
இதையெல்லாம் சமாளித்து, பம்ப்செட் வைத்து விவசாயம் செய்து விளைவித்த நெல்லை விற்கலாம் என்றால்நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைக் கூட அரசு திறக்கவில்லை. தஞ்சையில் தமிழ்வளவன் என்ற விவசாயிதனது நிலத்தில் அரிசி பயிரிட்டார். தண்ணீர் இல்லாமல் அது கருகியதால் உளுந்து பயிரிட்டார். அதற்கும் தண்ணீர்விட முடியாமல் காய்ந்து போனது. இதனால் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்றார்புகழேந்தி.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பொன்னையன், அந்த விவசாயியின் சாவு குறித்து போலீசார் விசாரித்தனர்.அவரது நிலம் செழிப்பாகவே உள்ளது. அவர் கள்ளக் காதல் காரணமாகத் தான் தற்கொலை செய்து கொண்டார்என்றார்.
பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமி பேசுகையில், விளைவித்த நெல்லை வாங்க அரசு முன் வராதகாரணத்தால்தான் பல இடங்களில் குறைந்தபட்ச விலை கூட கிடைக்காமல், நெல்லை கடலில் கொட்டியுள்ளனர்விவசாயிகள். திறந்துள்ள சில நெல் கொள்முதல் நிலையங்களிலும் பலவித கட்டுப்பாடுகளை விதிப்பதால்விவசாயிகள் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பொன்னையன், கடலில் கொட்டும் அளவுக்கு உழவர்கள் பணக்காரர்கள் அல்ல.அரசியல் கட்சிகளின் தூண்டுதால் கொட்டியிருக்கலாம் என்றார்.