அத்வானி பிரதமராக ஜெயலலிதாவுக்கு ஆசை: கருணாநிதி
சென்னை:
சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பது அவருடன் 1999ம் ஆண்டில் கூட்டணி அமைக்கும்போதுஜெயலலிதாவுக்குத் தெரியாதா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் தேர்தலில் சோனியா வெளிநாட்டவர் என்பதையே பிரதானமாக வைத்து பிரச்சாரத்தில் அதிமுக ஈடுபடும்என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதைடுத்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வாஜ்பாய் அரசை 1999ம் ஆண்டு சோனியாவுடன் சேர்ந்து கவிழ்த்த ஜெயலலிதாவுக்கு, அப்போது அவர்வெளிநாட்டவர் என்று தெரியாதா?.
பிரதமர் வாஜ்பாய் காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு வந்தால் விவசாயிகள் விரட்டி அடிபார்கள் என்று கடந்தநவம்பர் மாதம் தான் இதே ஜெயலலிதா சட்டசபையில் பேசினார். இப்போது வாஜ்பாயுடன் அவர் கூட்டணிசேர்ந்து கொண்டுள்ளது எந்த வகையில் நியாயம்?
அத்வானியைப் பிரதமராக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் சோனியா பிரதமராகக் கூடாது என்றகோஷத்தில் மறைத்து வைத்துக் கொண்டு பேசி வருகிறார் ஜெயலலிதா.
சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்ற அநாகரீகமான பிரச்சாரத்தில் திமுக எந்தக் காலத்திலும் ஈடுபட்டதும்இல்லை. ஈடுபடவும் மாட்டோம். அவர் இந்த நாட்டிற்கு மருமகளாய் வந்தவர். அதை மறந்துவிட்டு அவரை எப்படிவிமர்சிக்கலாம் என்று கேட்டுள்ளார் கருணாநிதி.