ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா,- யுஏஇ நாளை மோதல்
கொழும்பு:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நாளை தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியாஐக்கிய அரபு குடியரசுகள் நாடை எதிர்கொள்கிறது.
ஏ பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் ஆகிய நாடுகளும், "பி பிரிவில் இலங்கை, இந்தியா, ஐக்கியஅரபு குடியரசுகள் (யுஏஇ) ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
லீக் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள்
இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். லீக் போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறவுள்ளன.
கொழும்பிலும், டேம்புலாவிலும் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. பெரும்பாலான ஆட்டங்கள் பகலிரவுஆட்டங்களாக நடைபெற உள்ளன.
நாளை தொடங்கும் முதல் நாள் ஆட்டங்களில் வங்கதேசம் ஹாங்காங் அணியையும், இந்தியா யுஏஇ அணியை-யும்எதிர்கொள்கின்றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறுகிறது.
ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்தியா 4 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.