For Quick Alerts
For Daily Alerts
Just In
பழம்பெரும் நடிகை குசலகுமாரிக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
வறுமையில் வாடி வரும் பழம்பெரும் நடிகை குசலகுமாரிக்கு தமிழக அரசின் சார்பில் மாதம் ரூ. 5,000நிதியுதவிக்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
பழம்பெரும் நடிகையான குசலகுமாரி, தான் வறுமையில் வாடி வருவதாகவும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியவீட்டுக்கான வாடகையைக் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் கூறி ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதிஉதவி கோரியிருந்தார்.
இந்தக் கடிதத்தைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா குசலகுமாரியை கோட்டைக்கு வரவழைத்தார். அவருக்குஅரசின் சார்பில் மாதந்தோறும் ரூ. 5,000 உதவித் தொகையை அறிவித்த முதல்வர் அதற்கான உத்தரவையும்வழங்கினார். வாழ்நாள் முழுவதும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
பின்னர் குசலகுமாரி குடியிருக்கும் வீட்டிற்கான பாக்கித் தொகையான ரூ. 12,250க்கான காசோலையையும்ஜெயலலிதா வழங்கினார்.
Comments