For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை: புதிய உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தனியார் சுய நிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது ஒற்றைச் சாளர (சிங்கிள் விண்டோ)முறையை பின்பற்றத் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒற்றைச் சாளர முறையை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி சுப்ரமணியம் கமிட்டி பரிந்துரைத்திருந்தது. இந்தஉத்தரவை எதிர்த்து தனியார் சுய நிதி மருத்துவக் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, தினகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்புவழங்கியது.

அதன்படி தனியார் சுய நிதி மருத்துவ, பல் மருத்துவ மற்றும் மருந்தியல் கல்லூரிகளில் மாணவர்சேர்க்கையின்போது ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றத் தேவையில்லை. அதே சமயத்தில் இட ஒதுக்கீட்டுமுறையை சரியாக அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X