திமுகவின் புகார் பொய்: போலீஸ் அறிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றது
சென்னை:
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தல் வன்முறை தொடர்பான மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் முடிவுக்குகொண்டு வந்து பைசல் செய்தது. திமுக வேட்பாளர்கள் கூறிய புகார்கள் அனைத்தும் பொய் என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில்தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம் மற்றும் நாகப்பன் ஆகியோர், அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்களைதேர்தல் பணியாளர்களாக நியமிக்க தடை விதித்தனர்.
இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலின்போது பெரும் மோதல் ஏற்பட்டது. அமைச்சர்களும், திமுகவினரும் மாறி மாறி மறியலில்ஈடுபட்டனர். இதையடுத்து திமுக வேட்பாளர்கள் இருவரும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அவர்களது புகாரை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர், அமைச்சர்கள் சாலை மறியல் செய்ததைகண்டித்தனர். திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை பதிவு செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
இந் நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. அதில், திமுக தரப்பில் கூறப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறிய நீதிபதிகள், போலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,திமுகவினர் கூறிய புகார்கள் பொய்யானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை உண்மையானதா, இல்லையாஎன்பது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
இருப்பினும், புகார்தாரர் (திமுக வேட்பாளர்கள்) சம்பந்தப்பட்ட அமைப்பிடம் (நீதிமன்றத்தில்) முறையிட்டு நிவாரணம் பெறஇந்த அறிக்கை தடையாக இருக்காது என்று கூறி வழக்கை பைசல் செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.