தமிழக கடல்களில் ராட்சத அலைகள் நீடிப்பு; மக்கள் பீதி
சென்னை:
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோர நகரங்களில் கடல் கொந்தளிப்பாகவும், ராட்சத அலைகள் வந்தவண்ணம்இருப்பதாலும் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழக கடலோரப் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் காணப்படுகின்றனர். கடல் அதிககொந்தளிப்பாகவும், ராட்சத அலைகள் வந்தவண்ணம் இருப்பதாலும் இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில், இனிகோ நகர் என்ற பகுதியில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அலறி அடித்து ஓடினர். இதேபோல,திருச்செந்தூரிலும் கடல் மட்டம் உயர்ந்து பெரும் அலைகள் அடித்தன.
இதேபோல, சென்னையில் மெரினா கடற்கரையில், கடல் நீர் அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது. மேலும் அதிக அளவில்அலைகளும் வந்ததால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். 2 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக அலைகள்எழுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதே போன்ற கடல் கொந்தளிப்பு கல்பாக்கம், நாகப்பட்டனம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் காணப்பட்டது.
பருவநிலையில் மாற்றம் ஏற்படும்போது இதுபோன்று கடல் கொந்தளிப்பு ஏற்படுவது சாதாரண விஷயம்தான் என்று நிபுணர்கள்கூறுகிறார்கள்.