விதிமீறல்: தேர்தல் கமிஷனுக்கு பார்வையாளர்கள் அறிக்கை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுகவும், திமுகவும் தேர்தல் விதிமுறைகளை மீறியது குறித்து மத்திய தேர்தல் கமிஷனுக்கு அறிக்கைஅனுப்பி வைத்துள்ளதாக தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் சாந்து, நந்து ஆகியோர் காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் செலவை குறைக்கவில்லை.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வெங்கடேசனிடம் பேசியுள்ளோம். தேர்தல் செலவை கட்டுப்படுத்த வேண்டும் என்றுஎழுதப்பட்ட கடிதங்கள் கலெக்டர் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பப்படும்.
காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுகவும், திமுகவும் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளன. இது குறித்து மத்திய தேர்தல் கமிஷனுக்குஅறிக்கை அனுப்பியுள்ளோம்.
இத் தொகுதியில் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி புகார் கொடுத்து வருகின்றன. உண்மையான புகார்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும். சில புகார்களில் உண்மை இருப்பதில்லை என்றனர்.