கண்ணனின் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் நாளை உதயம்
பாண்டிச்சேரி:
காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ப.கண்ணன், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ்என்ற பெயரில் நாளை புதுக் கட்சியைத் தொடங்குகிறார்.
புதுவை காங்கிரஸில் முக்கியப் புள்ளியாக இருந்து வந்த ப.கண்ணன், கடந்த 1996ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைமூப்பனார் தொடங்கியபோது அதில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸுடன், தமாகா இணைந்தபோது, கண்ணன் மட்டும்இணையவில்லை. புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.
பின்னர் சட்டசபைத் தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது புதுச்சேரி மக்கள் காங்கிரஸ்.வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து தனித்து செயல்பட்டு வந்த கண்ணன் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் இணைந்தார்.
சமீபத்தில் அவர் முதல்வர் ரங்கசாமிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதால், அவரை 6 ஆண்டுகளுக்கு கட்சியைவிட்டு தற்காலிகமாக நீக்கி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது.
இந் நிலையில் மீண்டும் புதுக் கட்சியை கண்ணன் ஆரம்பிக்கப் போவதாக கூறப்பட்டு வந்தது. அதை கண்ணன் இன்றுசெய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
தனது புதிய கட்சி நாளை தொடங்கப்படுவதாகவும், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்று அதற்குப் பெயர்சூட்டப்பட்டுள்ளதாகவும், புதிய கட்சியின் கொடி உள்ளிட்டவை நாளை அறிமுகப்படுத்தப்படும் எனவும் கண்ணன்தெவித்துள்ளார்.