For Daily Alerts
Just In
கோவில்களை இந்துக்களிடம் ஒப்படையுங்கள்: பாஜக
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை இந்துக்களை நிர்வாகிகளாகக் கொண்ட சுயேச்சை அமைப்பிடம் தமிழக அரசுஒப்படைக்க வேண்டும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
ஜெயேந்திரரையும், காஞ்சி சங்கரமடத்தையும் அவமானப்படுத்த வேண்டும், அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும்என்ற நோக்கத்தில் அரசு செயல்படுகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் நிர்வாகங்களை தனியான அமைப்பிடம் அரசு உடனடியாக ஒப்படைக்கவேண்டும். இந்த அமைப்பை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்.
ஜூலை 23ம் தேதி ஜெயேந்திரரின் 71வது பிறந்த நாள் விழா திருப்பதியில் கோலாகலமாக கொண்டாடப்படும் என்றார் ராஜா.
Comments
Story first published: Saturday, July 23, 2005, 5:30 [IST]