எகிப்தில் தொடர் குண்டு வெடிப்பு: 83 பேர் பலி
ஷார்ம்-எல்-ஷேக் (எகிப்து):
எகிப்து நாட்டில் நடந்த தொடர் கார் வெடிகுண்டுத் தாக்குதல்களில் சுமார் 75 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 150க்கும்மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 20ல் ஆரம்பித்து இப்போது 83 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கைதொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரெட் சீ பகுதியில் இது டூரிஸ்ட் சீசன் ஆகும். இதனால் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அங்கு குவிந்துள்ளனர்.
இந் நிலையில் இத் தாக்குதல் நடந்துள்ளது. மொத்தத்தில் 7 குண்டுகள் வரை வெடித்தன. இதில் 4 குண்டுகள் கார்களில்வைக்கப்பட்டிருந்தன. கார்களில் வந்த 4 தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்து தாங்களும்வெடித்துச் சிதறினர்.
இதில் ஒரு கார் ஹோட்டலின் மீது வந்து மோதி வெடித்தது. இதில் அந்த ஹோட்டல் வெடித்து தூள் தூளானது.
இன்னொரு கார் வெடி குண்டு சில கி.மீ. தொலைவில் உள்ள மார்கெட் பகுதியில் வெடித்தது. இதில் அந்த இடத்திலேயே 17 பேர்பலியாயினர். அங்கு நின்றிருந்த 3 பஸ்களும் சிதறிப் போயின.
எகிப்து நேரப்படி நள்ளிரவு 1.15 மணியளவில் இந்தத் தாக்குதல்கள் நடந்தன. குண்டுகள் வெடித்த பகுதிகள் முழுவதும்உடல்கள் சிதறிக் கிடக்கின்றன.
பலியானவர்களில் பிரிட்டன், டென்மார்க், செளதி, குவைத், ரஷ்ய, கத்தார் சுற்றுலாப் பயணிகள் அடக்கம்.
இந்தத் தாக்குதலுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அப்துல்லா அஸ்ஸாம் பிரிகேட் என்ற தீவிரவாத அமைப்புபொறுப்பேற்றுள்ளது.
இராக், ஆப்கானிஸ்தான், செசன்யாவில் நடந்து வரும் சர்வதேச அநீதிக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத்தாக்குதலில் யூதர்கள் உள்ளிட்டவர்களை பழி தீர்த்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.