For Quick Alerts
For Daily Alerts
Just In
லண்டன்: தப்பிய 4 தீவிரவாதிகள் படங்கள்
லண்டன்:
லண்டனில் இரண்டாவது முறையாக ரயில், பஸ்களில் குண்டுகளை வெடிக்க வைக்க முயன்ற நான்கு தீவிரவாதிகளின்படங்களை அந் நாட்டு போலீசார் வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் இந்த நான்கு பேரும் மேலும் சிலரும் குண்டுகளை வெடிக்க வைக்க முயன்றனர். ஆனால், ஒரு பஸ் தவிரவேறிடங்களில் குண்டுகள் வெடிக்கவில்லை. இதையடுத்து அந்தத் தீவிரவாதிகள் தப்பியோடினர்.
அவர்கள் பஸ் நிலையத்திலும், ரயில் நிலையத்திலும், ரயிலிலும், பஸ்களிலும் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராக்களில்பதிவாகியுள்ளனர். இதையடுத்து அவர்களது படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்களைப் பார்த்தால் உடனேதெரிவிக்கும்படியும் பொது மக்களுக்கு போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே இவர்களுடன் சேர்ந்து குண்டு வைக்க வந்த இன்னொருவனை போலீசார் நேற்று சுட்டுக் கொன்றனர். மேலும்ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் இன்று காலை லண்டனின் மைல் என்ட் ரயில் நிலையத்தில் வெடி மருந்தின் வாசனை வருவதாக சில பயணிகள்கூறியதையடுத்து அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
Comments
Story first published: Saturday, July 23, 2005, 5:30 [IST]