திமுக ஆட்சியமைக்க காங் நிபந்தனையற்ற ஆதரவு:பாண்டிச்சேரியில் காங் ஆட்சிக்கு திமுக ஆதரவு
சென்னை:
திமுக அமைக்கவுள்ள புதிய ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவுதருவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதையடுத்து பாண்டிச்சேரியில் காங்கிரஸ்ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக திமுக அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மைகிடைக்கவில்லை. திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 96 இடங்களில்வென்றுள்ள அக்கட்சி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது.முதல்வராக கருணாநிதி நாளை பதவியேற்கவுள்ளார். திமுக ஆட்சியில் சேரமாட்டோம், வெளியிலிருந்துஆதரவு கொடுப்போம் என்று பாமக, கம்யூனிஸ் கட்சிகள்அறிவித்து விட்டன.
ஆனால் ஆட்சியில் பங்கு கோர காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாககருணாநிதியுடன் பேசப்படும் என்று மட்டும் தமிழக காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணசாமி கூறியிருந்தார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ்பார்வையாளர் மொய்லி,
சென்னை சென்று திமுக தலைவருடன் ஆலோசனை நடத்துகிறேன். அதன் பிறகுதிமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிய வரும் என்றார்.
ஆனால் காங்கிரஸை ஆட்சியில் சேர்க்க திமுக தயாராக இல்லை என்பதை மத்தியஅமைச்சர் தயாநிதி மாறன் மூலமாகத் தெளிவாக்கிவிட்டார் கருணாநிதி. மேலும்சோனியா காந்தியிடமும் கருணாநிதி இது குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.
அப்போது பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்க போதிய வெற்றிகிடைக்காததால், திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று கருணாநிதிஉறுதியளித்தார். ஆட்சியில் பங்கு கோர மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தரகாங்கிரஸ் முன் வந்துள்ளது.
இன்று காலை கருணாநிதியை சந்தித்துப் பேசிய மொய்லி இதனைத் தெரிவித்தார்.காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் கடிதத்தை கிருஷ்ணசாமிவழங்கினார்.