புழல் சிறைக்கு கைதிகள் மாற்றம்!
சென்னை:சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட கைதிகள்,புதிதாக திறக்கப்பட்டுள்ள புழல் மத்திய சிறைக்கு சனிக்கிழமை முதல்மாற்றப்படவுள்ளனர்.
சென்னை மத்திய சிறையில் பெரும் இட நெருக்கடி நிலவுவதால் கடந்த அதிமுகஆட்சிக்காலத்தில் புழல் பகுதியில் ரூ. 77 கோடி செலவில் புதிய மத்திய சிறை கட்டஅடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பணி முடிந்து நேற்று முன் தினம் புழல் சிறையைமுதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய மத்திய சிறை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர ஹோட்டலைப் போல காணப்படும் இந்த புதிய சிறையில் பல்வேறு நவீனவசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய சிறை திறக்கப்படடைத் தொடர்ந்து பழையமத்திய சிறையை மூட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் சனிக்கிழமை முதல் புழல் சிறைக்கு கைதிகைள மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் கைதிகள் புதிய சிறைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளனர்.
இவர்கள் தவிர வேலூர் மத்திய சிறையிலிருந்து 400 கைதிகளையும் புழல் சிறைக்குமாற்ற சிறைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.