நவீனமாகும் மதுரை விமான நிலையம்
டெல்லி:மதுரை உள்பட நாட்டின் 35 விமான நிலையங்களை புதுப்பித்து நவீனமயமாக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக படேல்அளித்த பதில்:
பெருநகரம் அல்லாத 35 நகரங்களின் விமான நிலையங்களை நவீனப்படுத்த சிவில்விமானப் போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
மதுரை, சண்டிகர், அமிர்தசரஸ், லக்னோ, ஜெய்ப்பூர், உதய்ப்பூர், போபால், கோவா,குவஹாத்தி, மங்களூர், இந்தூர், டேராடூன், ஆக்ரா, திம்மாபூர், அகர்தலா, ஜம்மு, புனேஆகியவை அதில் அடங்கும்.
இதுதொடர்பான ஆய்வறிக்கையை தாக்கல் செய்யமாறு குளோபர் டெக்னிக்கல்அட்வைசர்ஸ் மற்றும் இந்திய நிதி ஆய்வாளர்களை சிவில் விமானப் போக்குவரத்துதுறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விமானங்களில் பல்வேறு புதிய வசதிகளையும் ஏற்படுத்துவது குறித்தும்பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும்விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை 2011ம் ஆண்டுக்குள் முடிக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் படேல்.