கோவை அருகே பஸ்-கார் மோதலில் மூவர் பலி
கோவை:கோவை அருகே பஸ்சும் மாருதி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம்அடைந்தனர்.
டெல்லியை சேர்ந்த கீர்த்திசிங், ஓய்வு பெற்ற டிஐஜியாவார். இவரது மனைவி டி.பி.சிங், இவர்களது உறவினர்கள்எஸ்பி.சிங், அவரது மனைவி அபர்னா சிங். இவர்கள் 4 பேரும் உதவியாளர் ஒருவருடன் ஈரோடு வந்தனர்.
கோவையில் நடைபெறும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஈரோட்டில் இருந்து மாருதி வேன் மூலம்நேற்றிரவு புறப்பட்டனர். வேனை ஈரோட்டை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றார்.
இவர்களது வேன் கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கோவையில்இருந்து அவினாசி நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார் பஸ் எதிரே வந்து மோதியது. இதில் டிரைவர்செந்தில்குமார், அபர்நாத்சிங், டிபி.சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காககோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்வத்தால் கோவை-அவினாசி மெயின் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.