For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்துல் கலாம் திடீர் சென்னை வருகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:மோசமான வானிலை காரணமாக, ஆந்திர மாநலம் நெல்லூரிலிருந்து ஹெலிகாப்டரில் திருப்பதிக்குச் செல்லமுடியாததால், நெல்லூரிலிருந்து சென்னைக்கு காரில் வந்து அங்கிருந்து விமானம் மூலம் அவர் டெல்லிபுறப்பட்டுச் சென்றார்.

ஆந்திராவுக்கு நேற்று காலை வந்திருந்த கலாம் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளைமுடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல அவர்திட்டமிட்டிருந்தார்.

ஆனால் வானிலை சரியில்லாத காரணத்தால் ஹெலிகாப்டரை இயக்க முடியவில்லை. இதையடுத்துநெல்லூரிலிருந்து கார் மூலம் அப்துல் கலாம் சென்னைக்கு வந்தார். இரவு 8 மணிக்கு சென்னைக்கு வந்த கலாமைவிமான நிலையத்தில் டிஜபி முகர்ஜி, காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் அப்துல கலாம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். கலாமின் கார் விமானநிலையத்திற்குள் நுழைந்தபோது, அவருடன் வந்த இன்னொரு காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்தக காரில் வந்திருந்தவர்கள், கலாம் காருக்குப் பாதுகாப்பாகவந்தவர்களின் கார் என்று தெரிந்ததும் போலீஸார் அந்தக் காரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X