பக்தர்களிடம் பிக்-பாக்கெட்-3 பெண்கள் கைது
சென்னை:சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணத்தைபிக்பாக்கெட் அடித்த வந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவம் நடப்பதாகமடிப்பாக்கம் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்குதீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கோவிலின் வெளியே சந்தேகப்படும்படி மூன்று பெண்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாத்திமா (42),ராஃபியா (31), சிராஜ் (31) என்பது தெரிய வந்தது. 10 ஆண்டுகளாக இவர்கள்பிக்பாக்கெட் தொழிலில் ஈடுபட்டவர்கள்.
இவர்கள் மூன்று பேரின் போட்டோக்களும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில்,மற்றும் புறநகர் காவல்நிலையங்களில் பிக் பாக்கெட் திருடர்கள் ஜாக்கிரதை என்றுஒட்டப்பட்டிருக்கிறது.
அதன்பிறகும் அந்தப் பகுதியில் தைரியமாக அவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்த ரூ.2000பணத்தை பறிமுதல் செய்தனர்.