அணு ஒப்பந்த சட்டம்: கையெழுத்திட்டார் புஷ்
வாஷிங்டன்:இந்திய, அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான சட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்கையெழுத்திட்டார்.
இந்தியா, அமெரிக்கா இடையிலான சிவில் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின்இரு அவைகளிைலும் ஒப்புதல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து இதுதொடர்பான சட்டத்திற்கு அதிபர் புஷ்கையெழுத்திடுவது மட்டுமே பாக்கியாக இருந்தது.
இந்த சட்டத்தில் நேற்று புஷ் கையெழுத்திட்டார். வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நடந்த நிகழ்ச்சியில்துணை அதிபர் டிக்செனி, வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் உள்ளிட்டோர் புடை சூழ புஷ் சட்டத்தில்கையெழுத்திட்டார்.
இதன் மூலம் இந்த சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த சட்டத்திற்கு ஹென்றி ஜே ஹைட் இந்தியா -அமெரிக்கா அமைதி எரிபொருள் சட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
கையெழுத்திட்ட பின்னர் புஷ் பேசுகையில், இரு நாடுகளின் உறவையும் இது பலப்படுத்தும். இரு நாடுகளுக்கும்இடையே பரஸ்பர புரிந்துணர்வு வலுப்படும். இரு நாட்டு ராஜதந்திர உறவுகளும் மேம்படும் என்றார்.