For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்வானிக்கு பஞ்ச் வைத்த மன்மோகன் சிங்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:எதிர்க்கட்சித் தலைவரான அத்வானி, தனது பிரதமர் ஆசை நிறைவேற நீண்ட நாள்காத்திருக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சமீபத்தில் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அத்வானி,

அடுத்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடுவேன். பாஜகதலைவராக இருப்பவர்தான் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றஅவசியமில்லை. நான் பாஜக தலைவராக இருந்தபோது தான் வாஜ்பாயை பிரதமர்பதவிக்கு பரிந்துரைத்தேன். அதே போல இம்முறை எனது பெயர் பரிந்துரைக்கப்படவேண்டும். ஆனால், அதை வாஜ்பாய் செய்ய மாட்டார் என்றே நினைக்கிறேன்என்றார்.

இந் நிலையில், மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்பேசுகையில், இந்திய-அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்தால் (அதை இடதுசாரிகள்எதிர்ப்பதால்) ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி கவிழும் என்று அத்வானி பீதிஉண்டாக்குகிறார்.

அவர் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயல்கிறார். ஆனால், அது நடக்காது.எனது தலைமையிலான ஆட்சியை அத்வானியால் கவிழ்க்க முடியாது. அவரின் கனவுநிறைவேற அவர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

மேலும், தனது ஆசை நிறைவேற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆசியையும்அத்வானி பெற்றாக வேண்டும் என்று பாஜகவுக்கு பஞ்ச் வைத்தார்.

வழக்கமாக இவ்வாறு தடாலடியாகப் பேசாதவர் மன்மோகன் சிங். ஆனால்,முதல்முறையாக பாஜகவின் உள்கட்சி விவகாரத்தையும் அத்வானியின் ஆசையையும்முடிச்சு போட்டு மக்களவையில் பிரதமர் பேசியபோது காங்கிரஸ் எம்பிக்கள்மேஜைகளை தட்டோ தட்டு என்று தட்டினர். கை வலிக்கும் வரை தட்டினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X