மாட்டு கறி-ரவி சாஸ்திரி மீது பஜ்ரங் தள் வழக்கு
இந்தூர்:தென் ஆப்பிரிக்காவில் தான் மாட்டுக் கறி சாப்பிட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட்வீரரும், டிவி வர்னணையாளருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளதன் மூலம் இந்துக்களின்மனதை அவர் புண்படுத்தி விட்டார், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தூர் பஜ்ரங் தள் தலைவர் மனோஜ் மல்பானி இந்தூர் முதன்மைஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலானமுதலாவது டெஸ்ட் போட்டிக்கான வர்னணையில் ரவி சாஸ்திரி ஈடுபட்டபோது, தான்மாட்டுக் கறி சாப்பிட்டதாக தெரிவித்தார்.
இதன் மூலம் இந்துக்களின் மனதை அவர் புண்படுத்தி விட்டார். எனவே அவர் மீதுஇந்திய குற்றவியல் சட்டம் 295ஏ, 298ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 5ம் தேதி நேரில் ஆஜராகி தனதுவாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது.