சோனியாவுக்கு அல்-கொய்தா குறி?!
டெல்லி:காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கொலை செய்ய அல் கொய்தா அமைப்புதிட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து சோனியாவுக்குவழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தியை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்ய பாகிஸ்தானைச்சேர்ந்த ஒருங்கிணைந்த ஜிகாத் கவுன்சில் என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்தஅமைப்பு அல் கொய்தாவுடன் இணைந்த ஒரு கிளை அமைப்பாகும்.
இந்தப் பணிக்காக பாகிஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், போலியான ஆவணங்கள் மூலம் சோனியாவுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்படையில் ஊடுறுவி, மனித வெடிகுண்டாக மாறி சோனியாவைக் கொல்லத்திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சோனியாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்புஅதிகப்படுத்தப்பட்டுள்ளது. சோனியா காந்தி விரைவில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளஉ.பி. மாநில போலீஸுக்கும் இந்தத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அங்கு சோனியாகாந்தி பிரசாரம் செய்ய வரும்போது அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டள்ளது.
இதேபோல டெல்லி உள்ளிட்ட அண்டை மாநில போலீஸாரும்உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சோனியா காந்தி காரில் செல்லும்போது போக்குவரத்தைநிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு குறித்து உள்துறை செயலாளர் வி.கே.துக்கல் ஆய்வு செய்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் இது வழக்கமான ஆய்வுதான். இதுவிழாக்காலம். மேலும், குடியரசுத் தின விழா வருகிறது. நான்கு மாநில தேர்தல்கள்வரவுள்ளன. இதன் அடிப்படையில் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறித்துஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது சோனியா காந்தியின் உயிருக்கு மிரட்டல் எழுந்துள்ளதால், பாதுகாப்புநடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்ச உஷார் நிலையில் இருக்குமாறுபாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்ததப்பட்டுள்ளது என்றார் துக்கல்.