For Daily Alerts
Just In
ஜகார்தா-850 பயணிகளுடன் மூழ்கிய கப்பல்
ஜகார்தா:850 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இந்தோனேஷிய கப்பல் நடுக்கடலில் மூழ்கியது. இதில் எத்தனை பேர்உயிரிழந்தனர் என்று தெரியவில்லை.
இந்தோனேஷியாவின் மத்திய கலிமண்டான் மாகாணத்தில் இருந்து ஜாவா தீவுக்கு செனோபதி என்ற கப்பல்சென்று கொண்டிருந்தது. இந் நிலையில் நேற்று நள்ளிரவில் இந்தக் கப்பல் கடலில் மூழ்கியது.
தகவல் அறிந்த கடற்படையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், 9 பேரை மட்டுமே உயிருடன்மீட்டுள்ளனர். கடும் மழையும் காற்றும் வீசி வருவதால் மீட்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ளமுடியவில்லை.
சுமார் 17,000 தீவுகளைக் கொண்ட இந்தேனேஷியாவில் கடல் வழிப் பயணம் தவிர்க்க முடியாததாகும்.
Comments
Story first published: Saturday, December 23, 2006, 5:30 [IST]