விமானத்தில் கோளாறு-161 பயணிகள் தப்பினர்!
சென்னை:சென்னையிலிருந்து மும்பைக்குக் கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டதால் 161 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
சென்னையிலிருந்து மும்பைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 161 பயணிகளுடன் கிளம்பியது. விமானம் பறந்து கொண்டிருந்தபோது,என்ஜினிலிருந்து எண்ணைக் கசிவு ஏற்பட்டது.
இதனால் விமானிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மும்பைக்கு பயணித்தால் பெரும் விபத்து ஏற்படலாம் என்பதால் விமானத்தைமீண்டும் சென்னைக்குத் திருப்பினர்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. மும்பை விமானம் தரையிறங்க இருந்த நிலையில்,சிங்கப்பூரிலிருந்து வந்த விமானமும் தரையிறங்க இருந்தது.
இரு விமானங்களையும் ஒரே நேரத்தில் இறக்க முடியாது என்பதால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு விமானங்களும் சிறிது நேரம்வானில் வட்டமிட்டபடி இருந்தன.
முன்னேற்பாடுகளுடன் மும்பை விமானம் முதலில் தரையிறங்கியது. அதையடுத்து சிங்கப்பூர் விமானம் தரையிறங்கியது.
எண்ணைக் கசிவால் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து தப்பி பத்திரமாக விமானம் தரையிறங்கியதால் பயணிகள் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.பின்னர் மாற்று விமானம் மூலம் மும்பைக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.