For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக தமிழர்களுக்காக புதுவையில் மறியல்

By Staff
Google Oneindia Tamil News

புதுச்சேரி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கன்னடர்கள் நடத்தும் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கவலியுறுத்தி புதுவையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

பெரியார் திராவிடர் விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் கோகுல் காந்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் ஊர்வலம் நடந்தது.

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில்புதுச்சேரி மற்றும் தமிழகத்துக்குப் பாதகமாக இடம்பெற்றுள்ள அம்சங்கள் சரி செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

அதன் பின்னர் அவர்கள் முதலியார்ப்பேட்டையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் கூடி ரயில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களைத் தடுத்துநிறுத்திய போலீஸார், போராட்டத்தில் கலந்து கொண்ட 32 பேரை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X