திமுகவுக்கு தாவிய தேமுதிக கவுன்சிலர்!
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக கவுன்சிலர் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர்கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
இதன் மூலம் 5 இடங்களில் வென்ற மகிழ்ச்சியில் இருந்த தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு முதல் சறுக்கல்ஏற்பட்டுள்ளது.
தேமுதிக சார்பில் 27வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சர்தார், திமுகவுக்குத் தாவியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதியிடம் சர்தார் கொடுத்துள்ள கடிதத்தில்,
தமிழக முதல்வராகிய நீங்களும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினும் நல்ல முறையில் தமிழகத்தில் ஆட்சிசெய்து கொண்டிருக்கிறீர்கள். குறிப்பாக ஏழைகளுக்கு அரிசி 2 ரூபாய்க்கும், கலர் டிவி, இலவச நிலம், இலவசகேஸ் அடுப்பு என பொது மக்களுக்கு அள்ளித் தருகிறீர்கள்.
நான் தேமுதிகவில் இருந்தபோது அது ஒரு இயக்கமாக இல்லை. அந்த கட்சியில் "ஸ்டண்ட் குரூப்பில் வேலைசெய்கிறவர்கள் தான் இருக்கின்றனர். இதனால் நான் திமுகவில் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றுகூறியுள்ளார் சர்தார்.
அதே போல தேமுதிக சார்பில் வெற்றி பெற்ற மற்ற 4 வேட்பாளர்களுமே திமுகவுக்குத் தாவ தயாராகஇருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பாஜக சார்பில் வெற்றி பெற்ற இரு வேட்பாளர்களில் ஒருவர் திமுகவுக்குத் தாவுவது குறித்து பேச்சுநடத்த ஆரம்பித்துள்ளார் எனத் தெரிகிறது.
உள்ளாட்சி உறுப்பினர்கள் கட்சி தாவினால் பதவி போகாது என்பது குறிப்பிடத்தக்கது.