For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டர்பன்-மூக்குத்திக்காக போராடும் தமிழ்ப் பெண்

By Staff
Google Oneindia Tamil News

டர்பன்:தென்னாப்பிரிக்காவில் தமிழ்ப் பெண் ஒருவர் மூக்குத்தி அணிவதற்காக பள்ளி நிர்வாகத்துடன் போராடி வருகிறார்.

டர்பன் நகரில் வசிக்கும் தமிழ்ப் பெண் சுனாலி பிள்ளை (18). அங்குள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.

ஒரு நாள் மூக்குத்தி அணிந்து பள்ளிக்கு சென்றார். ஆனால் அதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் சுனாலி பிள்ளை பள்ளிக்குமூக்குத்தி அணிந்து செல்வதில் உறுதியாக இருக்கிறார்.

இதுகுறித்து சுனாலி பள்ளி நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சுனாலிக்கு எதிராகவே தீர்ப்புவந்தது. இதையடுத்து சுனாலி மேல்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். மேல் கோர்ட் சுனாலிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.

ஆனால் இந்த தீர்ப்பை பள்ளி நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. அரசியல் சட்ட கோர்ட்டில் பள்ளி நிர்வாகம் இதுகுறித்து அப்பீல் செய்துள்ளது.சுனாலியும் இந்த வழக்கை எதிர் கொண்டு வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X