For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வித்அவுட்டில் போன வக்கீல்-டிடிஆர் மீது புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டிக்கெட் பரிசோதகரிடம் பிடிப்பட்டார்.

சிவக்குமார் என்ற வழக்கறிஞர், எழும்பூரிலிருந்து கிண்டி செல்லும் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தபோது, கிண்டி ரயில் நிலையத்தில்டிக்கெட் பரிசோதகரிடம் பிடிபட்டார்.

ஆனால், தனது தவறை மறைக்க அவர் டிக்கெட் பரிசோதகரிடம் சண்டை போட ஆரம்பித்தார். தினமும் நூற்றுகணக்கான பேர் டிக்கெட் இல்லாமல்செய்கிறார்கள் என தன் தவறை நியாயப்படுத்த முயன்றார்.

இந்தப் பிரச்சனை தீர்க்க முடியாத பரிசோதகர் அவரை கிண்டி ரயில் நிலைய தலைமை அதிகாரி உமாவிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் ரயில்வேபாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ரயில்வே பாதுகாப்பு படையினர், அவரிடம் இனிமேல் பயணசீட்டு இல்லாமல் செல்லக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந் நிலையில் வழக்கறிஞர் சிவக்குமார், கிண்டி காவல் நிலையத்தில் ரயில் நிலைய அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் தன்னைகொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்துள்ளார்.

இது எப்டி இருக்கு???

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X