சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்த மனுஉச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி: சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக தண்டி சங்கராச்சாரியார் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
சேது சமுத்திர திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி தண்டி சங்கராச்சாரியார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இந்து புராணங்களின் படி சீதையை மீட்க ராமர் வானர சேனையின் உதவியுடன் பாலம் கட்டினர். அந்த பாலம் தற்போது சேது சமுத்திர திட்டத்தின் தற்போதைய வழியில் உள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் ராமர் கட்டிய பாலம் அழியும் நிலை உள்ளது.
ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த பாலம் அழிந்தால் அது இந்துக்களின் மத உணர்வை பாதிக்கும். எனவே சேது சமுத்திர திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மனுவை நீதிபதிகள் அரிஜீத் பச்சாயத், டி.கே ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, இது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.