For Daily Alerts
Just In
பெண்கள், குழந்தைகள் ஹெல்மட்அணியத் தேவையில்லை - தமிழக அரசு
சென்னை:இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களும், குழந்தைளும் ஹெல்மட் அணியத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் ஹெல்மட் அணியத் தேவையில்லை.
அதேபோல மெய்வழிச் சபை அல்லது மெய்வழிச் சாலை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஹெல்மட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சீக்கியர்களைப் போல தலையில் முன்டாசு அணிந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, August 14, 2007, 5:30 [IST]