For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மைனர் பெண்ணுக்கு 2 கட்டாய திருமணங்கள்!

By Staff
Google Oneindia Tamil News

நாமக்கல்:15 வயதான மைனர் பெண்ணுக்கு இரண்டு முறை கட்டாயத் திருமணங்கள் நடந்துள்ளன.

நாமக்கல் மாவட்டம், கரையாம்புதூரைச் சேர்ந்த சின்னுசாமி, மலர்க்கொடி தம்பதியின் மகள் தாமரைச் செல்வி (வயது 15). இவர் புதன்சந்தை அரசு மேல் நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

மலர்க்கொடிக்கு வேலன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதால் கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட்டது. இந் நிலையில் தனது கள்ளக் காதலன் வேலனுக்கு தனது மகள் தாமரைச் செல்வியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளார் மலர்க்கொடி.

ஆனால், தனது தாயாருடனும் தொடர்பு வைத்துக் கொண்டு தனக்கும் செக்ஸ் டார்ச்சர் தந்த வேலனிடம் இருந்து பிரிந்த தாமரைச் செல்வி தனது தந்தை சின்னசாமியிடம் அடைக்கலம் புகுந்தார்.

ஆனால், தந்தையோ தாமரைச் செல்வியை, ஏற்கனவே திருமணம் ஆன முருகேசன் என்ற நபருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளார்.

15 வயதே ஆன அந்தப் பெண் முருகேசனின் செக்ஸ் டார்ச்சர் தாக்க முடியாமல் வீட்டை விட்டு ஓடி ஒரு சேவை அமைப்பின் உதவியோடு நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார்.

அவர் கொடுத்த புகாரில், 15 வயதே ஆன என்னை கட்டாய திருமணம் செய்து பாலியல்ரீதியில் துன்புறுத்திய வேலன், முருகேசன் ஆகியோர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

தாமரைச்செல்வியை இந்த நிலைக்குத் தள்ளிய அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கைக எடுக்க வேண்டும் என சேவை அமைப்பு கோரியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X