For Daily Alerts
Just In
'மக்கள் குரல்' ஆசிரியர் எம்.எஸ். மரணம்
சென்னை: பிரபல தமிழ் பத்திரிக்கையாளரான எம்.சணமுகவேல் காலமானார். அவருக்கு வயது 81.
மக்கள் குரல் மாலை நாளிதழின் ஆசிரியராக இருந்த சண்முகவேல் எம்.எஸ். என அழைக்கப்பட்டவர்.
தினத்தந்தியில் பத்திரிக்கையாளராக தனது இதழியல் வாழ்வை தொடங்கிய அவர் 60 ஆண்டு காலம் இந்தத் துறையில் பல சாதனைகள் படைத்தவர்.
திருமணம் செய்து கொள்ளாத எம்.எஸ். சில காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். இன்று காலை மரணமடைந்தார்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 19:33 [IST]