For Daily Alerts
Just In
செங்கோட்டையில் தடம் புரண்ட ரயில்
செங்கோட்டையிலிருந்து புனலூருக்கு மீட்டர் கேஜ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு 7.30 மணியளவில் புனலூரில் இருந்து செங்கோட்டை வந்த ரயிலில் இன்ஜின் மாற்றம் செய்யும் பணி நடந்தது.
அப்போது ரயில் இன்ஜினில் இருந்து 5வது பெட்டி திடீரென தடம் புரண்டு கீழே சரிந்தது. அப்பெட்டி மற்றும் மற்ற பெட்டிகளுடன் உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அப்பெட்டியின் முன்னும், பின்னும் உள்ள பெட்டிகள் தடம் புரண்டன.
இதனையடுத்து அபாய சங்கு ஒலித்தது. தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ரயில் பெட்டி தடம் புரண்ட போது பயணிகள் யாரும் இல்லை.
மீட்பு பணிகள் நடந்து கொண்டுள்ளன.
Comments
Story first published: Sunday, June 1, 2008, 10:00 [IST]