உறவு முறிவு: சோனியாவிடம் அன்புமணி, பாலு விளக்கம்
தமிழகத்தில் பாமகவுடன் இனியும் கூட்டணியைத் தொடர முடியாது என அறிவித்து அக்கட்சியுடனான உறவை திமுக முறித்துக் கொண்டு விட்டது.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ், நேற்று காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவருமான சோனியா காந்தியை நேற்று சந்தித்தார்.
அப்போது திமுகவின் முடிவு, பாமகவின் நிலை, அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை ஆகியவை குறித்து சோனியாவிடம் விளக்கினார்.
தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சிதைவதும், பலமிழப்பதும் நல்லதல்ல என்பதையும் அவர் சோனியாவிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அன்புமணி நேரில் சந்தித்தார். அதேபோல கூட்டணிக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரிடம் போன் மூலம் பேசினார் அன்புமணி.
டி.ஆர்.பாலுவும் சந்திப்பு:
இதைத் தொடர்ந்து நேற்று மாலை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் சோனியா காந்தியை சந்தித்தார்.
திமுகவின் முடிவுக்கு என்ன காரணம் என்பதை சோனியாவிடம் விளக்கியதாக பின்னர் செய்தியாளர்களிடம் ெதரிவித்தார் டி.ஆர்.பாலு.