இன்று கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு
சென்னை: சென்னையில் நாளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதலமைச்சர் தலைமை யில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு, 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19மற்றும் 20ஆம் தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள மாநாட்டுக் கூடத்தில் நடைபெற உள்ளது.
19.6.08 ஆம் நாளன்று முதலமைச்சரின் தலைமை உரையுடன் துவங்கி வைக்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூட்டு மாநாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து, காவல்துறை தலைமை இயக்குநர், காவல் துறை கூடுதல் இயக்குநர்கள் மண்டல காவல்துறைத் தலை வர்கள், காவல்துறை கண் காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோருடன் கருத்துரை யாடல் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து 20.6.08 அன்று நடைபெறும் இரண்டாம் நாள் மாநாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோருடன் விவாதிக்கப்படவுள்ளது.
அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மா நாட்டில் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்