For Daily Alerts
Just In
இத்தாலியில் 28 பேர் கைது-விடுதலைப் புலிகள்?
ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவி செய்வோரை அந்த நாடுகள் கைது செய்து வருகின்றன. இதன் அடிப்படையில், இத்தாலியில் அந்நாட்டு, தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடி சோதனையில் இறங்கினர்.
இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக சந்தேகிக்கப்படும் 28 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் உள்ளிட்ட விவரங்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விவரத்தை இத்தாலி அதிகாரிகள் வெளியிடவில்லை.
Comments
Story first published: Thursday, June 19, 2008, 17:23 [IST]