கராச்சி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சூப்பர்-4 ஆட்டத்தில் வங்கதேசத்ைத இந்தியா எளிதாக வென்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதின. இந்திய அணியில் ஷேவாக், பிரவீன் குமார், பியூஷ் சாவ்லா ஆகியோர் ஓய்வளிக்கப்பட்டு, ராபின் உத்தப்பா, கோனி, ஓஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான தமீம் இக்பால் சிறப்பாக ஆடி அரை சதம் போட்டார். இஷாந்த் சர்மா பந்தில் 55 ரனகள் எடுத்திருந்தபோது அவர் ஆட்டமிழந்தார். இன்னொரு தொடக்க வீரரான நசிமுதீன் 6 ரன்களில் வீழ்ந்தார். கேப்டன் அஷ்ரபுல் பொறுப்பாக ஆட முயன்றார். ஆனால் அவரது துரதிர்ஷ்டம் 20 ரன்களில் வீழ்ந்தார். பின்னர் வந்தவர்களில் ஹசன் 25, ரஹீம் 22 ரன்களில் வீழ்ந்தனர். ஆனால் 6வது நிலை வீரராக களம் இறங்கிய அலோக் கபாலி படு சிறப்பாக ஆடி வங்கதேசத்தின் ஸ்கோர் பற்றாக்குறையை தீர்த்து வைத்தார். பிரில்லியன்ட் ஆக விளையாடிய கபாலி 115 ரன்களைக் குவித்து இந்திய பந்து வீச்சாளர்களைசோர்வடைய வைத்தார். இறுதியில், 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 283 என்ற பெரிய இலக்ைக எட்டியது வங்கதேசம். இந்தியத் தரப்பில் கோனி, ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஆர்.பி.சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் இந்தியா தனது ஆட்டத்தைத் தொடங்கியது. 14 ரன்கள் எடுத்த நிலையில், உத்தப்பா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கெளதம் கம்பீர் அபாரமாக ஆடினார். 36 பந்துகளில்அரை சத்தைப் போட்ட அவர் செஞ்சுரியை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த நிலையில், ரெஸா போட்ட பந்தில் மொர்டசாவிடம் கேட்ச் கொடுத்து 90 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ரோஹித் சர்மா இந்தப் போட்டியிலும் ரன் எடுக்கத் தடுமாறினார். 22 ரன்களில் அவர் வீழ்ந்தார்.இருப்பினும் சுரேஷ் ரெய்னாவும், யுவராஜ் சிங்கும் ஆட்டத்ைத தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இருவரும் இறுதி வரைஆட்டமிழக்கவில்லை. ரெய்னா இன்னும் ஒரு அருமையான ஆட்டத்ைதக்காட்டி 116 ரன்களைக் குவித்தார். யுவராஜ் தன் பங்குக்கு 36 ரன்களைச் சேர்த்தார். இறுதியில் 43.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 284 ரன்களை எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.