விலக ஜோதிபாசு அறிவுரை - சோம்நாத் இன்று ராஜினாமா?
கொல்கத்தா: லோக்சபா சபாநாயகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜிக்கு, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு அறிவுரை வழங்கியுள்ளார். இதையடுத்து இன்று சோம்நாத் விலகலாம் எனத் தெரிகிறது.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டு விட்டனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச்ேசர்ந்த லோக்சபா சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜியும் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நான் கட்சி சார்பற்றவன் என்று சோம்நாத் கூறி விட்டார். இருப்பினும் அவர் பதவி விலக வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து நெருக்குதல் வந்தது. அதேபோல காங்கிரஸ் தரப்பிலிருந்தும் நெருக்குதல் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று மூத்த தலைவர் ஜோதிபாசுவை கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் சோம்நாத் சாட்டர்ஜி சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த சோம்நாத் செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டுச் சென்றார்.
இருப்பினும் இந்த சந்திப்பின்போது, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, இடதுசாரிகள் தங்களது கருத்ைத ஒருமித்து பிரபதிபலிக்க வேண்டும். எனவே இடதுசாரிகளின் முடிவுக்கேற்ப உங்களது பதவியை ராஜினாமா செய்து விடுவதே நல்லது என்று சோம்நாத்துக்கு ஜோதிபாசு அறிவுரை கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்ய சோம்நாத் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இன்று அவர் தனது முடிவை அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.