For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சிபுரம் அருகே பாமக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வில்லியம்பாக்கம் என்ற இடத்தில்,பாமக கவுன்சிலர் அடையாளம் தெரியாத கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வில்லியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா என்கிற ஆசை ராஜா (36). இவர் அடிப்படையில் ஒரு ரவுடி. கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் இவர் சம்பந்தப்பட்டுள்ளார். வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ராஜாவுக்கு இரு மனைவிகள் உள்ளனர். சமீபத்தில்தான் தனது 2வது மனைவியை விட்டு விட்டு முதல் மனைவியுடன் வந்து வசிக்க ஆரம்பித்தார்.

இன்று காலை இவரும், மைத்துனர் சுரேஷும், வயலில்நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அவர்களை மறித்தது. பின்னர் ராஜாைவ சுற்றி வளைத்து அக்கும்பல் சரமாரியாக வெட்டியது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ராஜா வில்லியம்பாக்கம் பஞ்சாயத்து பாமக கவுன்சிலராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X