For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திண்டுக்கல் விநாயகர் சிலை ஊர்வலம்-தடியடி

By Staff
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் போலீஸார் தடியடி நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் பாறைப்பட்டியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை மாலை நேரத்தில் முக்கிய பகுதியின் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அப்போது விழாக்குழுவினர் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் யூசூப் நகர் பகுதி வழியாக விநாயகர் சிலையை கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு முஸ்லீம் பிரமுகர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனால் போலீசாருக்கும், ஊர்வலம் செல்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X