For Daily Alerts
Just In
சென்னை-ரூ.2.8 கோடி ஹெராயினுடன் பெண் கைது
சென்னை: ரூ.2.80 கோடி மதிப்புள்ள ஹெராயினுடன் வியட்நாமைச் சேர்ந்த பெண் பயணி கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு தாய் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கியது. சுங்க அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர்.
ஒரு பெண்ணின் பையை சோதனை செய்தபோது, அதில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மூன்று பாக்கெட் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் அவரது பெயர் புவோன்ங் (40), வியட்நாமைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய போலீஸாரிடம் அந்த பெண்ணை அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Friday, September 5, 2008, 15:16 [IST]