For Daily Alerts
Just In
பங்குச் சந்தையில் மேலும் சரிவு - சென்செக்ஸ் வீழ்ச்சி!
மும்பை: இந்திய நிறுவனங்களில் செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டதால் இந்தியப் பங்குச் சந்தை இன்றும் கடும் சரிவைச் சந்தித்தது.
சென்செக்ஸ் இன்று வர்த்தக நேர முடிவில் 429.88 புள்ளிகளை இழந்து 9409.81 புள்ளிகளாக நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் இன்று மட்டும் 125 புள்ளிகள் குறைந்துவிட்டது. 2813 புள்ளிகளில் நிலைபெற்றது நிப்டி.
இன்றைய வர்த்தகத்தில் பெரும் சரிவைச் சந்தித்தது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள்தான். ஒரு பங்குக்கு ரூ.57 வரை இழப்பைச் சந்தித்தனர் முதலீட்டாளர்கள்.
Story first published: Wednesday, November 12, 2008, 23:19 [IST]