For Daily Alerts
Just In
கார்ப்பரேஷன் வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டு வழங்கும் எல்.ஐ.சி
நாக்பூர்: கார்ப்பரேஷன் வங்கியுடன் இணைந்து எல்.ஐ.சி. நிறுவனம் கிரெடிட் கார்டு துறையில் களம் இறங்குகிறது.
இதுகுறித்து எல்.ஐ.சியின் மூத்த கோட்ட மேலாளர் பி.பி.குஜார் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கார்ப்பரேஷன் வங்கியில் எல்.ஐ.சியின் பங்கு 28 சதவீதம் உள்ளது. எனவேதான் கிரெடிட் கார்டு துறையில் ஈடுபட கார்ப்பரேஷன் வங்கியைத் தேர்வு செய்தோம்.
கிரெடிட் கார்டு திட்டம் தொடங்கும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.
சமீபத்தில் ஜீவன் ஆஸ்தா என்ற திட்டத்தை எல்.ஐ.சி. நிறுவனம் தொடங்கியது. நிலையற்ற பங்கு வர்த்தகம் குறித்து அச்சப்படும் மக்களுக்கு இந்த ஜீவன் ஆஸ்தா திட்டம் கை கொடுக்கும்.
இந்த பாலிசியை ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு எடுக்கலாம். இதில் உச்சகட்ட தொகை எதுவும் கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்றார் அவர்.
Comments
Story first published: Tuesday, December 9, 2008, 15:14 [IST]