For Daily Alerts
Just In
மும்பைக்காக நியூயார்க்கில் ஒலித்த நம்பிக்கை மணி
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ல லோயர் மன்ஹாட்டன் பகுதியில், மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நம்பிக்கை மணி (Bell of Hope) ஒலிக்கச் செய்யப்பட்டது.
இந்த இடத்திற்கு அருகில்தான் நியூயார்க் நகரின் மிகப் பிரபலமான இரட்டை கோபுரம் இருந்தது.
மும்பையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இங்குள்ள நம்பிக்கை மணியை ஒலிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் இந்திய துணைத் தூதர் அஜய் கோன்டனே உள்ளிட்ட 50 பேர் கலந்து கொண்டனர். நம்பிக்கை மணியை 20 முறை அசைத்து ஒலிக்கச் செய்தார் கோன்டனே.
Comments
Story first published: Tuesday, December 9, 2008, 13:06 [IST]