தேமுதிகவின் தேர்தல் பாடல்கள்-'புரட்சி கலைஞர் ஆட்சி..!
கோவை: தேமுதிகவின் தேர்தல் பாடல்கள் கோவையில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு கட்சியும் தனது கொள்கைகள், லட்சியங்கள், செய்யப் போகிற திட்டங்களை விளக்க பாடல்களை வெளியிடுவது வழக்கம்.
முன்பெல்லாம், திமுக, அதிமுக பிரசாரப் பாடல்கள்தான் பிரபலமாக இருக்கும். சினிமா பாடல்களின் ட்யூன்களில் அமைக்கப்பட்டு இப்போது தேர்தல் காலங்களில் கட்சிகளின் பாடல்கள் காதுகளை 'கொய்' என்று கூறு போட்டு கிழித்துக் கொண்டிருக்கின்றன.
எந்தக் கட்சியாக இருந்தாலும் முதலில் நல்ல பாடல்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். பிறகுதான் கூட்டங்களில் பேசவே ஆரம்பிக்கிறார்கள்.
இந்த வரிசையில் தேமுதிகவின் தேர்தல் பிரசாரப் பாடல்களை கோவையில் வெளியிட்டுள்ளனர்.
அதில் ஒரு பாடல், புரட்சிக் கலைஞரின் தலைமையில் ஆட்சி அமைப்போம், நாட்டினிலே வாட்டும் வறுமையை விரட்டிடுவோம் என்று தொடங்குகிறது.
இந்தப் பாடல் கோவை மக்களிடையே முனுமுனைப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது நடக்கவிருப்பது லோக்சபா தேர்தல். பிறகு எப்படி விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைப்பார்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள்.