For Daily Alerts
Just In
சென்னை குடிசை பகுதியில் தீ-குழந்தை பலி?
சென்னை: சென்னை ஷெனாய்நகரில் கூவம் கரையோரம் உள்ள குடிசைப் பகுதியி்ல் தீ விபத்து ஏற்பட்டதில் 300 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. ஒரு குழந்தை பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
அவ்வைபுரம் பகுதியில் உள்ள இந்த குடிசைப் பகுதியில் நேற்று மாலை ஒரு குடிசையி்ல் தீ பற்றியது. பலத்த காற்று வீசியதால் அது மற்ற குடிசைகளுக்கும் பரவியது.
இதில் சில வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வண்டிகள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் 300 குடிசைகள் எரிந்து நாசமாயின. இரு பெண்களுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 வயது குழந்தை ஒன்று பலியானதாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
Comments
Story first published: Tuesday, May 26, 2009, 11:44 [IST]