லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சானியா மிர்சா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர். ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான இங்கிலாந்தில் உள்ள லண்டனில் நடக்கிறது. நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா, ஜெர்மனியின் அன்னா குரோன்பீல்டை எதிர்கொண்டார்.இதில் சூப்பராக விளையாடிய சானியா முதல் செட்டை 6-2 என வென்றார். ஆனால், அடுத்த செட்டை 2-6 என பறிகொடுத்தார். இதையடுத்து மூன்றாவது சுற்றில் சிறப்பாக செயல்பட்ட சானியா அதை 6-2 என வென்றார். இறுதியில் 6-2, 2-6, 6-2 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.பெண்கள் பிரிவில் நடந்த மற்ற ஒற்றையர் போட்டிகளில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரியா ஷரபோவா, எலினா டெமன்டிவா, சுலோவேக்கியாவின் டேனியலா ஹன்டுசோவா ஆகியோர் இரண்டாவது தகுதி பெற்றனர்.பெடரர் வெற்றி...ஆண்கள் பிரிவில் ரோஜர் பெடரர் 7-5, 6-3, 6-2 என சீன தைபேவின் யன் சுன் லூவை வென்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் செர்பியாவின் நோவக் டோகோவிச் 6-7, 7-6, 6-2, 6-4 என பிரான்சின் ஜூலியன் பென்னட்டை தோற்கடித்தார். #13;