சம்பளமில்லா லீவு...போகிறவர் போகலாம்!-ஏர் இந்தியா
அதே நேரம் இந்த விடுமுறைக் காலத்தில் ஊழியர்கள் விரும்பினால் தனியார் விமான நிறுவனங்களிலோ அல்லது கம்பெனிகளிலோ சேர்ந்து பணியாற்றிவிட்டு, விடுப்பு முடிந்ததும் ஏர் இந்தியாவுக்கு திரும்பலாம்.
ஏர் கிராப்ட் எஞ்ஜினீயர், பைலட்டுகள் உள்ளிட்டோருக்கும் இந்த புதிய திட்டம் பொருந்தும் என்றும், ஆனால் இவர்கள் விடுப்புக் காலத்தில் அரசுத்துறை நிறுவனங்கள் எதிலும் பணியாற்றக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நிச்சயம் பெயில் அவுட் தரப்படும் என்றும், ஆனால் அதற்கு முன் ஊழியர்களின் சம்பளத்தைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சம்பளத்தில் பிடித்தம் செய்வது அல்லது குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்க ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்தது. இதனை அனைத்து விமான ஊழியர் யூனியன்களும் மிகக் கடுமையாக எதிர்த்தன. இதைத் தொடர்ந்துதான் இந்த சம்பளமில்லா விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா.